
Thaimai Anbu Karangal
Kannankurichi, Salem

.jpg)
தாய்மை அன்பு கரங்கள் அறிவு சார்பு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகம் (இருபாலாருக்குமான காப்பகம்).
சேலத்தில், கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில், 35 -க்கும் அதிகமான அறிவு சார்பு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை பாதுகாத்து வருகின்றனர்.
இங்கு உள்ள குழந்தைகளுக்கு அறிவாற்றல் திறம்பட தினமும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு ஊதுபத்தி தயாரித்தல், சாம்பிராணி தயாரித்தல், தையல் பயிற்சி போன்ற தொழிற்கல்வி வகுப்புகள் நடைபெறுகின்றன.
குழந்தைகளின் உடல் திறனை மேம்படுத்த விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, திறன்படும் குழந்தைகளை மாவட்டம் / மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்கப்படுகிறது.
இவை அனைத்தும் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக, குழந்தைகளின் நலனை கருதி மட்டுமே செயல்பட்டு வருகிறது.
அறிவு சார்பு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்.
1) சராசரியான குழந்தைகளை போல இந்த சிறப்பு குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள தெரியாது.
தங்களுக்கு எந்த அளவிற்கு உணவு தேவை என்பது தெரியாது. எந்த உணவை எப்படி உட்கொள்ளவேண்டும் என தெரியாது
உணவை உண்பதற்கு இவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
2) உடை அணிய பயிற்சி அளிக்க வேண்டும். இவர்கள் அணியும் உடையில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அந்த உடையை மாற்ற தெரியாது அதற்க்கு மாறாக உடையை கிழித்து எறிவார்கள். குளிர் காலத்தில் சுவட்டர் தேவை என்பது சொல்ல தெரியாது. காப்பக நிர்வாகிகள் குழந்தைகளின் தேவையை அறிந்து உடை மாற்ற வேண்டும்.
3) கழிவறைக்கு சென்று இயற்கை உபாதைகளை கழிக்க பயிற்சி தர வேண்டும். சில அவசர நேரங்களில் இவர்கள் இருக்கும் இடத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்துவிடுவார்கள்.
அதைப்பற்றி சொல்லவும் தெரியாது, இவர்களின் தேவை புரிந்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
இதுபோல, நாம் எளிதாக செய்யும் செயல்களை இக்குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டும்.
இந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் கற்றலுக்கு தேவையான பொருட்களை வாங்க உங்களால் ஆனா உதவியை செய்யுங்கள்.
.jpg)
Celebrate Your Unforgettable Moments With Us
.jpg)
Birthday Celebration
.jpg)
Wedding Anniversary
.jpg)
